Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பஸ் ஸ்டாண்ட் பணிக்கு வெட்டப்படும் ஒரு மரத்துக்கு 10 மரங்கள் நட உத்தரவு

பஸ் ஸ்டாண்ட் பணிக்கு வெட்டப்படும் ஒரு மரத்துக்கு 10 மரங்கள் நட உத்தரவு

பஸ் ஸ்டாண்ட் பணிக்கு வெட்டப்படும் ஒரு மரத்துக்கு 10 மரங்கள் நட உத்தரவு

பஸ் ஸ்டாண்ட் பணிக்கு வெட்டப்படும் ஒரு மரத்துக்கு 10 மரங்கள் நட உத்தரவு

ADDED : ஜூலை 03, 2025 02:04 AM


Google News
பனமரத்துப்பட்டி, ஜூலை 3

சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், மல்லுார் டவுன் பஞ்சாயத்து பகுதி உள்ளது. அந்த வழியே, தினமும், 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், சாலையில் பஸ்களை நிறுத்தி, அவசர கதியில் பயணியரை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.

வீரபாண்டி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க, 2022 மார்ச்சில் மல்லுார் டவுன் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு சாலையோரத்தில் உள்ள வயதான புளியமரங்களை அகற்ற ஏற்பாடு செய்தனர். ஆனால் மரங்களை வெட்டக்கூடாது என, நாம் தமிழர் கட்சி நிர்வாகி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மரங்களை அகற்றும் பணி வருவாய் ஆய்வாளர் அனுமதியுடன் மேற்கொள்ள வேண்டும். ஒரு மரத்தை அகற்ற, 10 மரங்களை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 30ல், மல்லுார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம் நடந்தது. அதில் நீதிமன்ற உத்தரவுப்படி மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என, தீர்மானம் நிறைவேற்றினர்.

இதுகுறித்து துணைத்தலைவர் அய்யனார் கூறுகையில், ''நீதிமன்ற உத்தவை பின்பற்றி, பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us