Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்

ADDED : ஜூன் 20, 2024 07:26 AM


Google News
சேலம்: திருவண்ணாமலையில் ஆனி பவுர்ணமி கிரிவலம், வார இறுதி நாளை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 300 சிறப்பு பஸ்கள், நாளை முதல் வரும், 24 வரை இயக்கப்பட உள்ளது.

அதன்படி இந்த பஸ்கள், சேலம், ஆத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய பஸ் ஸ்டாண்டுகளில் இருந்தும், தட நீட்டிப்பு, கூடுதல் நடைகள் இயக்கப்படும். இதற்கு முன்பதிவு மையம், www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூர்; சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூரு, சிதம்பரம், காஞ்சிபுரம்; ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை; திருச்சியில் இருந்து ஓசூர்; நாமக்கல்லில் இருந்து சென்னை; பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலுார்; ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு, இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன.சேலம், தர்மபுரி, ஓசூர் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை காலை, 6:00 மணி முதல், 21 நள்ளிரவு, 1:00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us