Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கடன் பெற்று தருவதாக பணம், நகை மோசடி: மதுரை முதியவரை சுற்றிவளைத்த தனிப்படை

கடன் பெற்று தருவதாக பணம், நகை மோசடி: மதுரை முதியவரை சுற்றிவளைத்த தனிப்படை

கடன் பெற்று தருவதாக பணம், நகை மோசடி: மதுரை முதியவரை சுற்றிவளைத்த தனிப்படை

கடன் பெற்று தருவதாக பணம், நகை மோசடி: மதுரை முதியவரை சுற்றிவளைத்த தனிப்படை

ADDED : ஜன 31, 2024 03:37 PM


Google News
சேலம் : கடன் பெற்று தருவதாக, பணம், நகையை பறித்துச்சென்ற மதுரை முதியவரை, கள்ளக்குறிச்சியில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அரசநத்தம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் செல்வம், 53.

இவரது மனைவி சின்னபொண்ணு, 44. கடந்த நவ., 23ல் செல்வம் பஸ்சில் சென்றபோது, ஒருவர் பேச்சு கொடுத்தார். அவர், 'ஆத்துார் கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக உள்ளேன். அரசிடம் இருந்து கடன் பெற்று தருகிறேன். 50,000 ரூபாய் கொடுத்தால், 4 லட்சம் ரூபாய் கடன் கிடைக்கும்' என கூறி மொபைல் எண்ணை கொடுத்துள்ளார்.இதையடுத்து செல்வம், மர்ம நபரின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் தெரிவித்தபடி நவ., 25 காலை, 9:00 மணிக்கு, வாழப்பாடி அரசு போக்குவரத்து பணிமனை அருகே செல்வம் சென்றார். அங்கு வந்த அந்த மர்ம நபர், செல்வத்திடம், 45,000 ரூபாயை பெற்றுக்கொண்டவர், கடனுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும். உன் மனைவிக்கு நகை போட்டு, டிச., 2 காலை, 10:00 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்' என அறிவுறுத்தி சென்றார்.அதன்படி செல்வம், சின்னபொண்ணுவுடன் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சைக்கு நுழைவுச்சீட்டை எடுத்து தயாராக இருந்த மர்ம நபர், அதை செல்வத்திடம் கொடுத்து, நகல் எடுத்து வருமாறு கூறி அனுப்பிவிட்டார். பின் சின்னபொண்ணுவிடம், மருத்துவ சோதனையின்போது, 'நகை அணிந்தால் மருத்துவர்கள் திட்டுவர்' என கூற, நகையை கழற்றி அவரது பையில் வைத்தார். அந்த பையை வாங்கிக்கொண்ட மர்ம நபர், ஆவணங்களை பெற்று வருவதாக கூறிச்சென்றார். ஆனால், திரும்பி வரவே இல்லை.இதுகுறித்து சின்னபொண்ணு புகார்படி சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்ததில் மதுரை, ஆரப்பாளையம், உச்சபரமேட்டை சேர்ந்த முகமது மீரான், 62, நகையை பறித்தது தெரிந்தது.கள்ளக்குறிச்சியில் இருந்த அவரை, அங்கு சென்று நேற்று கைது செய்த தனிப்படை போலீசார், 9 பவுன் சங்கிலியை மீட்டனர். அவரிடம் விசாரித்ததில் சென்னை, திண்டுக்கல், மதுரை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் அரசு அதிகாரி எனக்கூறி, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் கடன் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us