/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேட்டூர் அணை நீர்வரத்து 2,832 கன அடியாக உயர்வுமேட்டூர் அணை நீர்வரத்து 2,832 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணை நீர்வரத்து 2,832 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணை நீர்வரத்து 2,832 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணை நீர்வரத்து 2,832 கன அடியாக உயர்வு
ADDED : ஜூலை 08, 2024 07:34 AM
மேட்டூர்: கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு, 4,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
முன்னதாக கடந்த, 3ல் கபினி அணையில் திறக்கப்பட்ட, வினாடிக்கு, 3,000 கனஅடி நீரின் ஒரு பகுதி, தமிழக எல்லையை கடந்து நேற்று மேட்டூர் அணைக்கு வந்தது. இதனால் கடந்த, 28ம் தேதி, 43 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம், 1,465 அடியாக உயர்ந்தது. நேற்று, 2,832 கன அடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம், 40.05 அடி, நீர் இருப்பு, 12.11 டி.எம்.சி.,யாக இருந்தது.