Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஐஸ்கிரீம் சாப்பிட்டு சாவகாசமாக திருடியவருக்கு வலை

ஐஸ்கிரீம் சாப்பிட்டு சாவகாசமாக திருடியவருக்கு வலை

ஐஸ்கிரீம் சாப்பிட்டு சாவகாசமாக திருடியவருக்கு வலை

ஐஸ்கிரீம் சாப்பிட்டு சாவகாசமாக திருடியவருக்கு வலை

ADDED : ஜூன் 06, 2025 02:32 AM


Google News
ஏற்காடு, ஏற்காடு, லேடீஸ் சீட் பிரதான சாலையை சேர்ந்தவர் ரமேஷ் கிருபாகரன், 48. இவர், சென்ட், மிளகு, காபி விற்கும் கடை வைத்துள்ளார். அந்த கடையில் பணிபுரியும் பெண், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, கடையை மூடிவிட்டு, வழக்கம்போல் அங்குள்ள மறைவான இடத்தில் சாவியை வைத்துச்சென்றார். இதை பார்த்த ஒருவர், அந்த பெண் சென்றதும் சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்றார்.

கடையில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை கவனிக்காத அவர், மெழுகுதிரியை பற்ற வைத்து கடையில் இருந்த, 5 ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட்டார். பின், 2,400 ரூபாய், சில சென்ட் பாட்டில்களை எடுத்துக்கொண்டு, கடையை சாத்திவிட்டு சென்றார். சற்று நேரம் கழித்து, இக்காட்சிகளை, ரமேஷ் கிருபாகரன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் புகார்படி, ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us