Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சுற்றுச்சுவரை இடித்து வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது

சுற்றுச்சுவரை இடித்து வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது

சுற்றுச்சுவரை இடித்து வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது

சுற்றுச்சுவரை இடித்து வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது

ADDED : ஜூன் 06, 2025 02:32 AM


Google News
சேலம் :சேலம், எருமாபாளையம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 42. லட்சுமிபுரம் குடியிருப்பு செயலர். அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் சகோதரர்கள் கிருஷ்ணமூர்த்தி, 36, லோகநாதன், 35. இவர்களுக்கும், ஜெய்சங்கருக்கும் இடையே, பொதுப்பாதை தொடர்பாக பிரச்சனை இருந்தது. ஜெய்சங்கர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் சகோதரர்கள், நேற்று முன்தினம் பொக்லைன் மூலம் பொது பாதை அருகே உள்ள ஜெய்சங்கரின் சுற்றுச்சுவரை இடித்தனர். தடுத்த ஜெய்சங்கரையும் தாக்கினர். இதுகுறித்து ஜெய்சங்கர் புகார்படி கிச்சிப்பாளையம் போலீசார், சகோதரர்களை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us