/உள்ளூர் செய்திகள்/சேலம்/26ல் அஞ்சல் குறைதீர் கூட்டம் 18க்குள் புகார் அனுப்பலாம்26ல் அஞ்சல் குறைதீர் கூட்டம் 18க்குள் புகார் அனுப்பலாம்
26ல் அஞ்சல் குறைதீர் கூட்டம் 18க்குள் புகார் அனுப்பலாம்
26ல் அஞ்சல் குறைதீர் கூட்டம் 18க்குள் புகார் அனுப்பலாம்
26ல் அஞ்சல் குறைதீர் கூட்டம் 18க்குள் புகார் அனுப்பலாம்
ADDED : ஜூன் 12, 2024 06:42 AM
சேலம்,: வரும், 26ல் அஞ்சல் குறைதீர் கூட்டம் நடக்க உள்ள நிலையில், முன்னதாக, 18க்குள் புகார்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்தீபன் அறிக்கை:
கோட்ட அளவில் அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் வரும், 26 காலை, 10:30 மணிக்கு நடக்க உள்ளது. வாடிக்கையாளர்கள் வரும், 18க்குள், 'அஞ்சல் கண்காணிப்பாளர், மேற்கு கோட்டம், சேலம் - 636 005' என்ற முகவரிக்கு புகார்களை அனுப்ப வேண்டும்.
சூரமங்கலம் கோட்ட அலுவலகத்தில் நடக்க உள்ள கூட்டத்தில் மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் உள்ளிட்ட சேவை தொடர்பான புகார்களுக்கு, அது தொடர்பான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி, அதன் அலுவலகம் உள்ளிட்ட முழு விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
சேமிப்பு வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார்களுக்கு அதன் முழு கணக்கு எண், காப்பீடு பாலிசி எண், காப்பீட்டாளரின் பெயர், முகவரி, தபால் அலுவலக பெயர் உள்ளிட்ட விபரங்களை அனுப்ப வேண்டும். புகார் அனுப்பும் உரையின் மீது, 'டாக் அதாலத் வழக்கு' என, குறிப்பிட வேண்டும்.
அஞ்சல் நிலையம் இடமாற்றம்
இளம்பிள்ளை, பாட்டப்பன் கோவில் தெருவில் இயங்கி வந்த அஞ்சல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு, நேற்று முதல், பழக்கார தோட்டம் பகுதியில் உள்ள புரொபஷனல் கொரியர் அலுவலகம் அருகே இடமாற்றப்பட்டுள்ளது.