Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நெஞ்சு வலியால் லாரி டிரைவர் சாவு

நெஞ்சு வலியால் லாரி டிரைவர் சாவு

நெஞ்சு வலியால் லாரி டிரைவர் சாவு

நெஞ்சு வலியால் லாரி டிரைவர் சாவு

ADDED : செப் 18, 2025 02:28 AM


Google News
தாரமங்கலம், திருவண்ணாமலை, அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன், 49. இவர் ஏற்கனவே சர்க்கரை நோய்க்கு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம், சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த பாட்டப்பன் குழுவினரின் கிணறு வெட்டும் பொருட்களை, சாத்தனுாரில் இருந்து லாரியில் ஏற்றி வந்தார். இரவு, 10:30 மணிக்கு, கே.ஆர்.தோப்பூர் அருகே இயற்கை உபாதைக்கு லாரியை நிறுத்திவிட்டு இறங்கினார்.

பின் மீண்டும் லாரியில் ஏறியபோது நெஞ்சு வலி ஏற்பட்டு விழுந்தார். அவரை, லாரியில் இருந்தவர்கள், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பின், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். மணிகண்டன் மனைவி அமுதா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us