Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ போக்குவரத்து தொழிலாளருக்கு ஆதரவு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளருக்கு ஆதரவு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளருக்கு ஆதரவு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளருக்கு ஆதரவு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ADDED : செப் 16, 2025 01:41 AM


Google News
மேட்டூர், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மேட்டூர் தாலுகா அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை தலைவர் காமராஜ் தலைமை வகித்தார்.

அதில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்; தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என

வலியுறுத்தினர்.

செயலர் சிங்கராயன், துணை தலைவர் வெற்றிவேல், நிர்வாகிகளான, போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் சுப்ரமணியன், மின் ஓய்வூதியர் சங்கம் கலைமணி, வருவாய், போக்குவரத்து, நெடுஞ்சாலை, மின்வாரியம் உள்பட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதேபோல் ஆத்துார் தாலுகா அலுவலகம் முன், அரசு ஊழியர் சங்க கிளை தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வு கால பலன்களை உடனே வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

கெங்கவல்லி ஒன்றிய அலுவலகம் முன், அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us