Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ போதை'யில் துாங்கிய மகனின் தலையில் கருங்கல்லை போட்டு கொன்ற தந்தை கைது

போதை'யில் துாங்கிய மகனின் தலையில் கருங்கல்லை போட்டு கொன்ற தந்தை கைது

போதை'யில் துாங்கிய மகனின் தலையில் கருங்கல்லை போட்டு கொன்ற தந்தை கைது

போதை'யில் துாங்கிய மகனின் தலையில் கருங்கல்லை போட்டு கொன்ற தந்தை கைது

ADDED : ஜூன் 01, 2025 01:54 AM


Google News
சேலம், சேலம், அம்மாபேட்டை, குமரன் காலனியை சேர்ந்த மாதையன் மகன் சாந்தகுமார்,37; மர அரவை மில் தொழிலாளி. திருமணம் செய்து கொள்ளாத இவரிடம், மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு, வீட்டின், 2வது மொட்டை மாடியில் துாங்கிக்கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அவரது தாய் குப்பாயி, 55, சென்று பார்த்தபோது, மகனின் இடது காதில் காயம் ஏற்பட்டு, ரத்தம் உறைந்த நிலையில், சுயநினைவின்றி கிடந்தார். உடனே அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் காலை, 11:00 மணிக்கு இறந்துவிட்டார்.

அம்மாபேட்டை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில், மகனை, அவரது தந்தையே கொன்ற தகவல் வெளியானது.

தொடர்ந்து போலீசாரிடம், மாதையன் அளித்த வாக்குமூலம் வருமாறு: 'போதை'க்கு அடிமையான சாந்தகுமார், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்தார். சம்பவ நாளன்றும் தகராறு செய்தார். அந்த மன உளைச்சலில், அதிகாலை, 3:30 மணிக்கு, வீடு அருகே இருந்த கருங்கல்லை, 'போதை'யில் துாங்கி கொண்டிருந்த மகனின் தலை மீது போட்டதில் காயம் அடைந்தார். பின் கல்லை, இருந்த இடத்தில் வைத்துவிட்டு துாங்க சென்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் வழக்குப்பதிந்து மாதையனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us