Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.15,000 பறிப்பு

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.15,000 பறிப்பு

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.15,000 பறிப்பு

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.15,000 பறிப்பு

ADDED : ஜூலை 25, 2024 01:13 AM


Google News
சேலம்: சேலம், கந்தம்பட்டி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி, 67.

சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் துாய்மை பணியாளராக உள்ளார். நேற்று காலை, வேலைக்கு செல்லும் முன், 4 ரோடு அருகே தனியார் மருத்துவம-னையில் மருந்து வாங்கி கொண்டு பழைய பஸ் ஸ்டாண்டுக்கு, டவுன் பஸ்சில் சென்றார். கூட்டமாக இருந்த நிலையில், கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது பாப்பாத்தி அவரது மஞ்சப்பையை பார்த்தபோது, கிழிக்கப்பட்டு அதிலிருந்து, 15,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அங்கேயே இறங்கிய பாப்-பாத்தி கதறி அழுதார். அங்கு வந்து டவுன் போலீசார் விசாரித்-தனர்.அதில் அவர் பஸ்சில் அமர்ந்திருந்த இருக்கையை ஒட்டி நின்றி-ருந்த சிலர் பேச்சு கொடுத்தபடி, அவரது கவனத்தை திசை திருப்பி, பிளேடு மூலம் பையை கிழித்து பணத்தை பறித்துச்-சென்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us