Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பா.ஜ., நிர்வாகி மீது வழக்கால் பொறுப்பில் இருந்து விடுவிப்பு

பா.ஜ., நிர்வாகி மீது வழக்கால் பொறுப்பில் இருந்து விடுவிப்பு

பா.ஜ., நிர்வாகி மீது வழக்கால் பொறுப்பில் இருந்து விடுவிப்பு

பா.ஜ., நிர்வாகி மீது வழக்கால் பொறுப்பில் இருந்து விடுவிப்பு

ADDED : ஜூன் 01, 2024 06:33 AM


Google News
கொளத்துார் : பா.ஜ., நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கொளத்துார், காவேரிபுரம், குத்தேரிக்கல்காட்டில் புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் வெங்கடாசலம், சகாதேவன், குழந்தையப்பன் ஆகியோர், மரங்களை வெட்டி சேதமாக்கினர். தொடர்ந்து குடிசை போட்டனர்.இதுகுறித்து கடந்த, 27ல், காவேரிபுரம் வி.ஏ.ஓ., விஜயகுமார் புகார்படி, கொளத்துார் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த விவகாரத்தில் சகாதேவனுக்கு, பா.ஜ.,வை சேர்ந்த, சேலம் மேற்கு மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் சீனிவாசன் உதவி செய்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்தனர். இதனால் கடந்த மே, 29ல், அவரை கட்சி பொறுப்பில் இருந்து, சேலம் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சுதிர்முருகன் விடுவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us