/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோவில் விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு பதிவு கோவில் விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு பதிவு
கோவில் விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு பதிவு
கோவில் விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு பதிவு
கோவில் விழாவில் தகராறு: 4 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 12, 2025 01:44 AM
ஓமலுார், கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில், 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பராஜ், 46. பா.ஜ.,வில் மாவட்ட பொறுப் பில் உள்ளார். இவர் அமரகுந்தியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு கடந்த, 7ல் சென்றுள்ளர்.
அப்போது, வேம்படிதாளம் அண்ணாநகரை சேர்ந்த மோகனசுந்தரேஸ்வரி, 37, இந்து ஜனசேனா இயக்கத்தின், மாநில மகளிரணி துணை செயலராக உள்ளார். இந்த இரு தரப்புக்கு இடையே, கோவில் மரியாதை செலுத்துவதில் தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. ஜயப்பராஜ் அளித்த புகார்படி, மோகனசுந்தரேஸ்வரி மீதும், இதேபோல் மோகனசுந்தரேஸ்வரி அளித்த புகார்படி ஐயப்பராஜ், விக்னேஷ்குமார், வாசுதேவன் ஆகியோர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.