/உள்ளூர் செய்திகள்/சேலம்/வைகாசி திருவிழாவில் அலகு குத்திய பக்தர்கள்வைகாசி திருவிழாவில் அலகு குத்திய பக்தர்கள்
வைகாசி திருவிழாவில் அலகு குத்திய பக்தர்கள்
வைகாசி திருவிழாவில் அலகு குத்திய பக்தர்கள்
வைகாசி திருவிழாவில் அலகு குத்திய பக்தர்கள்
ADDED : ஜூன் 02, 2025 06:44 AM
ஆத்துார்: ஆத்துார், உடையார்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில், கடந்த மே, 26ல், சக்தி அழைத்தலுடன், வைகாசி திருவிழா தொடங்கியது.
நேற்று மாலை, 5:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், விமானம் உள்ளிட்ட அலகு குத்தியும், ராணிப்பேட்டை, புதுப்பேட்டை, பழையபேட்டை, ரயிலடி தெரு வழியே இரவு, 7:00 மணிக்கு கோவிலை அடைந்தனர். முன்னதாக மூலவர் முத்துமாரியம்மன் சுவாமி, தங்க கவசத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.