ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
ஏற்காடு: மனித நேய ஜனநாயக கட்சியின், மாவட்ட செயலர்கள் கூட்டம் ஏற்காட்டில் நேற்று நடந்தது.
தலைவர் தமிமுன் அன்சாரி தலைமை வகித்தார். அதில், 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இளைய தலைமுறையினரை கட்சியில் இணைத்து புது அணிகளை உருவாக்குவது; தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே, 20 பேர் கட்சியில் இணைந்து கொண்டனர்.