Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பயிர் காப்பீடுக்கு 6 வரை அவகாசம்

பயிர் காப்பீடுக்கு 6 வரை அவகாசம்

பயிர் காப்பீடுக்கு 6 வரை அவகாசம்

பயிர் காப்பீடுக்கு 6 வரை அவகாசம்

ADDED : ஜூலை 03, 2025 02:21 AM


Google News
சேலம், சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் அறிக்கை:

மாவட்டத்தில் காரீப் - 2025 பருவத்தில் பச்சைப்பயிறு, தட்டைப்பயிறுக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த ஜூலை, 1 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அதற்கான அவகாசம், 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 6 வரை, காப்பீடுக்கு, 2 சதவீத பிரிமீயத்தொகை, 336 ரூபாய் செலுத்தி, இடர்பாடு ஏற்படும் பட்சத்தில், காப்பீடு தொகை பெற்று பயன்பெறலாம். விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். அத்துடன் மொபைலில் உழவர் செயலி மூலமும் முழு விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us