மாணவரை அடித்த ஆசிரியை மீது வழக்கு
மாணவரை அடித்த ஆசிரியை மீது வழக்கு
மாணவரை அடித்த ஆசிரியை மீது வழக்கு
ADDED : ஜூன் 12, 2025 02:05 AM
காரிப்பட்டி, வாழப்பாடி, சந்திரபிள்ளைவலசு அருகே பள்ளத்தாதனுாரை சேர்ந்த, 17 வயது சிறுவன், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். கடந்த, 5 மாலை, 6:00 மணிக்கு, மாணவர், பூச்சி மருந்து குடித்ததாக, தந்தையிடம் தெரிவித்தார். உடனே தந்தை, சேலம் அரசு மருத்துவமனையில் மகனை சேர்த்தார். தற்போது சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ளார்.
அவரிடம் விசாரித்தபோது, பள்ளி ஆசிரியை ஜெயந்தி கேள்வி கேட்டு சக மாணவர்கள் முன் அடித்து அவமானப்படுத்தியதால், மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்ததாக, சிறுவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தந்தை புகார்படி, காரிப்பட்டி போலீசார், ஆசிரியை மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீரும் விசாரிக்கிறார்.