Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குழாயில் மீண்டும் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு

குழாயில் மீண்டும் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு

குழாயில் மீண்டும் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு

குழாயில் மீண்டும் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு

ADDED : ஜூன் 28, 2025 04:01 AM


Google News
வனவாசி: சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே வனவாசி டவுன் பஞ்சா-யத்தில், 12 வார்டுகளில், 1,860 குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஜலகண்டாபுரம் - நங்கவள்ளி பிரதான சாலையில், காஸ் கொண்டு செல்லக்கூடிய பிரதான குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், இரு நாட்களுக்கு முன், வனவாசி பகுதிக்கு செல்லக்

கூடிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் விநியோகம் பாதிக்-கப்பட்டது.இதுகுறித்து, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கோதை நாய-கியிடம் கேட்டபோது, ''உடைப்பை சரி செய்து, இன்று(நேற்று) குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது, மீண்டும் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இதனால் குழாய் சீரமைப்பு பணியில், மீண்டும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவாக சரிசெய்து குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us