Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பாடங்களை புரிந்து படிக்க பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை

பாடங்களை புரிந்து படிக்க பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை

பாடங்களை புரிந்து படிக்க பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை

பாடங்களை புரிந்து படிக்க பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை

ADDED : ஜூலை 27, 2024 01:26 AM


Google News
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்-பள்ளி மாணவ, மாணவியர் திறன்களை ஊக்குவிக்க, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நேற்று நடந்த விழாவில், பெங்களூருவில் உள்ள, 'இஸ்ரோ' தொழில்நுட்ப விஞ்ஞானி பரமசிவம், மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:அதிக மதிப்பெண் வாங்குவதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகி-றோமோ, அதே அளவு, அடிப்படை பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். அப்போது தான் நாம் எழுத்து, நேர்முகத்தேர்வில் கடி-னமான கேள்விக்கும் பதில் அளிக்க முடியும். பேச்சு திறமை, ஆங்கில மொழி அறிவு ஆகியவற்றுடன் நவீன தொழில்நுட்பங்-களை அறிந்து கொள்ள வேண்டும். 'இஸ்ரோ' நிறுவனம், மாண-வர்களுக்கு கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். தலைமை ஆசிரியர் நாகேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us