ADDED : ஜூன் 18, 2024 07:11 AM
தாரமங்கலம் : கொரோனாவில் கணவரை இழந்த, இரண்டு குழந்தைகளின் தாய்க்கு, வாலிபர் வாழ்வு கொடுத்தார்.தாரமங்கலம் கோணகாபாடியை சேர்ந்தவர் விஜய், 25, பி.காம் பட்டதாரி.
இவர் தாரமங்கலத்தில் பத்திர எழுத்தர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சின்னகாடம்பட்டியை சேர்ந்தவர் லலிதா, 35. இவரும் அதே பத்திர எழுத்தரிடம் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன், கொரோனா தொற்றால் இறந்தார். இவருக்கு மகன், மகள் உள்ளனர்.இந்நிலையில் விஜய், லலிதா இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும், நேற்று திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின், பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்ச மடைந்தனர். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். விஜயின் பெற்றோர் சம்மதிக்காததால், இருவரையும் லலிதாவின் சகோதரர்களுடன் அனுப்பி வைத்தனர்.