/உள்ளூர் செய்திகள்/சேலம்/ேஷர் மார்க்கெட்டில் பணம் இழந்தவர் விபரீத முடிவுேஷர் மார்க்கெட்டில் பணம் இழந்தவர் விபரீத முடிவு
ேஷர் மார்க்கெட்டில் பணம் இழந்தவர் விபரீத முடிவு
ேஷர் மார்க்கெட்டில் பணம் இழந்தவர் விபரீத முடிவு
ேஷர் மார்க்கெட்டில் பணம் இழந்தவர் விபரீத முடிவு
ADDED : ஜூன் 19, 2024 01:54 AM
சேலம், ேஷர் மார்க்கெட்டில் பணத்தை இழந்ததால், கடன் தொல்லையில் சிக்கிய வாலிபர், நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் கருங்கல்பட்டி, தெற்கு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் ரகுநாத், 29, இவரது மனைவி ஐஸ்வர்யா லட்சுமி, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, சூரமங்கலம் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கடந்த, 12ல் இரண்டாவது குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் குழந்தையை பார்த்துவிட்டு, கார்த்திக் ரகுநாத் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று காலை ஐஸ்வர்யா லட்சுமி போன் செய்தும் எடுக்காததால், நண்பர்களை வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அவர்கள் சென்று, பூட்டியிருந்த கதவை உடைத்து பார்த்த போது, சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். ேஷர் மார்க்கெட்டில் பணத்தை இழந்ததால், கடன் தொல்லையில் சிக்கியதால், தனது தந்தை தனசேகரனிடம் வீட்டை விற்று பணம் தரும்படி கேட்டுள்ளார். அவர் மறுத்துவிடவே, மன வேதனையிலிருந்த கார்த்திக் ரகுநாத் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.