/உள்ளூர் செய்திகள்/சேலம்/தந்தையை கொன்று மகள் கடத்தல் ஜாமினில் வந்த காதலன் ஆத்திரம்தந்தையை கொன்று மகள் கடத்தல் ஜாமினில் வந்த காதலன் ஆத்திரம்
தந்தையை கொன்று மகள் கடத்தல் ஜாமினில் வந்த காதலன் ஆத்திரம்
தந்தையை கொன்று மகள் கடத்தல் ஜாமினில் வந்த காதலன் ஆத்திரம்
தந்தையை கொன்று மகள் கடத்தல் ஜாமினில் வந்த காதலன் ஆத்திரம்
UPDATED : ஆக 05, 2024 12:45 PM
ADDED : ஆக 05, 2024 06:48 AM
ஓசூர்: போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த காதலன், காத-லியின் தந்தையை அடித்து கொன்று விட்டு, காதலியை கடத்தி சென்றது, கெலமங்கலம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே காமையூரை சேர்ந்தவர் முனிராஜ், 45; ஜெ.காருப்பள்ளி கூட்ரோடு அருகே ஒருவரது நிலத்தில் தங்கி, விவசாயம் செய்து வந்தார்; இவரின், 17 வயது மகளை, ஜெ.காருப்பள்ளியை சேர்ந்த தொழிலாளி வெங்கட்ராஜ், 24, காதலித்தார். கடந்தாண்டு அக்.,23ம் தேதி சிறு-மியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரில் தேன்-கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்-குப்பதிந்து வெங்கட்ராஜை கைது செய்தனர்.
கடந்த டிச.,ல் ஜாமினில் வந்த வெங்கட்ராஜ், சிறுமியிடம் தொடர்ந்து பேசி வந்தார். இதை முனிராஜ் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுமியின் வீட்டுக்கு சென்ற வெங்-கட்ராஜ், அவரை கடத்த முயன்றார். இதை முனிராஜ் தடுத்துள்ளார். இதனால் அவரை கட்டையால் தலையில் தாக்கி விட்டு, சிறுமியை கடத்தி சென்றார். தலையில் பலத்த காயம-டைந்த முனிராஜ், அதே இடத்தில் பலியானார். காதலியுடன் தலைமறைவான காதலனை, கெலமங்கலம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.