Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மகனுக்கு அடைக்கலம் தந்தை உள்பட 3 பேர் கைது

மகனுக்கு அடைக்கலம் தந்தை உள்பட 3 பேர் கைது

மகனுக்கு அடைக்கலம் தந்தை உள்பட 3 பேர் கைது

மகனுக்கு அடைக்கலம் தந்தை உள்பட 3 பேர் கைது

ADDED : ஜூன் 27, 2025 01:45 AM


Google News
வாழப்பாடி,பெத்தநாயக்கன்பாளையம்

அருகே வசிக்கும், 14 வயது சிறுமி, பேளூர் அருகே அவரது பாட்டி வீட்டில் தங்கினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன், 21, பாலியல் தொந்தரவு செய்தார்.

சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து பெற்றோர் புகார்படி, வாழப்பாடி மகளிர் போலீசார், கீர்த்திவாசன் மீது, 'போக்சோ' வழக்குப்பதிந்தனர்.

ஆனால் இரு மாதங்களாக கீர்த்திவாசனை மறைத்து வைத்து, அடைக்கலம் கொடுத்து உதவியதாக, அவரது தந்தை கண்ணன், 59, அக்கா கணவர் மணிகண்டன், 35, நண்பர் வினோத்குமார், 29, மீது 'போக்சோ' வழக்குப்பதிந்து, நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us