விவசாயி கொலை வழக்கில் 3 பேர் கைது
விவசாயி கொலை வழக்கில் 3 பேர் கைது
விவசாயி கொலை வழக்கில் 3 பேர் கைது
ADDED : செப் 12, 2025 02:26 AM
சேலம், விவசாயி கொலை வழக்கில், 3 பேரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
சேலம், போடிநாயக்கன்பட்டி, மிட்டாக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன், 65, கடந்த 7, இரவு மது அருந்திவிட்டு, வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் துாங்கியுள்ளார். காலை அவரது மனைவி பெருமாயி பார்த்த போது, தலையில் காயம் அடைந்த நிலையில், இறந்து கிடந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
கொலை வழக்காக மாற்றி, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கந்தம்பட்டியை சேர்ந்த பிரபு, 32, என்பவர், அவரது பக்கத்து வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதில் வாய் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று, பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் குமரவேல், 26, தினேஷ், 20 ஆகியோருடன் சேர்ந்து, துாங்கி கொண்டிருந்த விவசாயி செல்லப்பனை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. மூவரையும் போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.