Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/43 பவுன் திருடிய 2 பேருக்கு 'காப்பு'

43 பவுன் திருடிய 2 பேருக்கு 'காப்பு'

43 பவுன் திருடிய 2 பேருக்கு 'காப்பு'

43 பவுன் திருடிய 2 பேருக்கு 'காப்பு'

ADDED : ஜூலை 11, 2024 12:56 AM


Google News
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே வையப்பமலை, அன்னை நகரை சேர்ந்த தம்பதியர் கோபால், 58, மாது, 50; கூலித்தொழிலாளிகள்.

இவர்கள் வீட்டில், கடந்த, 6 இரவு, முகமூடி அணிந்து புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 43 பவுன் நகைகள், 50,000 ரூபாய், இரு மொபைல் போன்களை, திருடிச்சென்றனர்.இதுகு-றித்த புகார்படி, எலச்சிபாளையம் போலீசார் விசாரித்தனர். நேற்று மல்லசமுத்திரம் அருகே ஆத்துமேடு டாஸ்மாக்கில் இருந்த இரு-வரை பிடித்து விசாரித்ததில், சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ், 19, ஆட்டையாம்பட்டி முருகேசன், 21, என்பதும், கோபால் வீட்டில் திருடியதும் தெரிந்தது. அவர்களிடம், 21 பவுன் நகைகள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us