Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஊராட்சி ஆபீசை முற்றுகையிட்ட 100 நாள் வேலை திட்ட பெண்கள்

ஊராட்சி ஆபீசை முற்றுகையிட்ட 100 நாள் வேலை திட்ட பெண்கள்

ஊராட்சி ஆபீசை முற்றுகையிட்ட 100 நாள் வேலை திட்ட பெண்கள்

ஊராட்சி ஆபீசை முற்றுகையிட்ட 100 நாள் வேலை திட்ட பெண்கள்

ADDED : மே 22, 2025 01:35 AM


Google News
மகுடஞ்சாவடி :மகுடஞ்சாவடி, கூடலுார் ஊராட்சியில், 1,000-க்கு மேற்பட்டோர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, பணித்தள பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த, 3 பேருக்கு மாற்றாக, தற்போது, 3 பேர் நியமிக்கப்பட்டனர். இதனால் நேற்று புதிதாக நியமிக்கப்பட்ட பணித்தள பொறுப்பாளர்களுக்கும், ஏற்கனவே பணியாற்றிய பொறுப்பாளருக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து மதியம், 3:00 மணிக்கு, 100 நாள் வேலை திட்ட பெண்கள், கூடலுார் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, புது பணித்தள பொறுப்பாளர்களே பணியில் நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின் மண்டல துணை பி.டி.ஓ., சின்னசாமி, பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால் பெண்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us