Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/1 கிலோ முருங்கை ரூ.200 ஆக எகிறியது

1 கிலோ முருங்கை ரூ.200 ஆக எகிறியது

1 கிலோ முருங்கை ரூ.200 ஆக எகிறியது

1 கிலோ முருங்கை ரூ.200 ஆக எகிறியது

ADDED : ஜூன் 21, 2024 07:28 AM


Google News
ஆத்துார் : சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனுார், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறி சாகுபடி செய்யப்படுகின்றன.

அந்த காய்கறியை தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட், ஆத்துார், தம்மம்பட்டி, வாழப்பாடி உழவர் சந்தைகளில் விவசாயிகள் விற்கின்றனர். சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம், 27 கிலோ பெட்டி, 1,500 ரூபாயாக இருந்த நிலையில், கிலோ தக்காளி, 50 முதல், 60 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று பெட்டி தக்காளி, 1,800 ரூபாய், கிலோ, 70 முதல், 80 ரூபாயாக விலை உயர்ந்தது.அதேபோல் இரு நாட்களுக்கு முன் கிலோ, 100 முதல், 110 ரூபாயாக இருந்த முருங்கைக்காய், நேற்று தலைவாசல் மார்க்கெட்டில், 170 ரூபாய், வெளிமார்க்கெட்டில், 200 ரூபாய் வரை விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us