ADDED : ஜூலை 19, 2024 02:34 AM
சேலம்: பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் நாகரத்தினம், 26. கடந்த, 14ம் தேதி தனது நண்பர் கவுதம் வீட்டின் அருகே, யமகா பைக்கை நிறுத்திவிட்டு மீண்டும் மாலை வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகு-றித்து நாகரத்தினம் அளித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி பொன்னம்மாப்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த இப்ராஹிம் என்ற துரைக்கண்ணன் திருடிச்சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், பைக்கை மீட்டனர்.