ADDED : ஜூன் 13, 2024 06:46 AM
இடைப்பாடி : சேலம் மாவட்டம் இடைப்பாடி பயணியர் மாளிகையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், இ.பி.எஸ்., நேற்று, அ.தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்தார்.
குறிப்பாக கொங்கணாபுரம் ஒன்றிய குழு தலைவர் மணி, நகர செயலர் முருகன், ஒன்றிய செயலர்கள் மாதேஸ், மாதேஸ்வரன், ராஜேந்திரன், செல்வம், நகராட்சி முன்னாள் தலைவர் கதிரேசன், நங்கவள்ளி, இடைப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்கள், இடைப்பாடி நகர் பகுதி நிர்வாகிகளை சந்தித்து தனித்தனியே ஆலோசனை நடத்தினார். பின் லோக்சபா தேர்தலில் இடைப்பாடி தொகுதியில் கூடுதலான ஓட்டுகளை பெற்றதற்கு, நிர்வாகிகளை பாராட்டியதோடு, நன்றி தெரிவித்தார்.