ADDED : ஜூன் 14, 2024 01:18 AM
சேலம், சேலம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயத்தின், 50ம் ஆண்டு தொடக்க விழா,
தேர் திருவிழா நேற்று நடந்தது. காலையில் நடந்த திருவிழா திருப்பலியில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வன் ராயப்பன் பங்கேற்றார். இரவு, 7:00 மணிக்கு தேர் பவனி தொடங்கியது. தேரில், குழந்தை இயேசுவை கையில் ஏந்தியபடி, அந்தோணியார் வீற்றிருக்க, காந்தி சாலை, அஸ்தம்பட்டி, மணக்காடு வழியே சென்ற தேர், மீண்டும்
ஆலயத்தை அடைந்தது. பங்கு தந்தையர் உள்பட பலர் பங்கேற்றனர்.