ADDED : ஜூலை 20, 2024 08:42 AM
சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு வாலிபால், கேரம் விளையாட்டுக்கான, 4 வார கால பயிற்சி நேற்று தொடங்கப்பட்டது.
இதுகுறித்து சிறை எஸ்.பி., வினோத் கூறியதாவது: இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் மாநில அளவில் சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரந்தோறும், 5 நாள் என, 4 வாரத்தில் பயிற்சி அளித்து, இறுதிநாளில் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் கைதிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆயில் கார்ப்பரேஷன் மண்டல தலைவர் கிரண்குமார், சேலம் மாவட்ட மேலாளர் நிகில்நக்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.