Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ திறன் வளர்க்கும் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

திறன் வளர்க்கும் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

திறன் வளர்க்கும் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

திறன் வளர்க்கும் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

ADDED : ஜூன் 30, 2024 04:02 AM


Google News
சேலம்: ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி நடத்தப்பட உள்ளதால், விருப்பமுள்ள இளைஞர்கள் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:

சேலம் மாவட்ட ஊரக இளைஞர்களுக்கு, 'அட்மா' திட்டத்தில், 'அங்கக' வேளாண்மை(ஆர்கானிக் பார்மிங்) தொடர்பான திறன் வளர்க்கும் பயிற்சி, ஜூலை, 22 முதல், 27 வரை, 6 நாட்கள், சீலநாயக்கன்பட்டியில் உள்ள உழவர் பயிற்சி நிலையத்தில் நடக்க உள்ளது.

இதில் பயிற்சி பெற, ஊரக பகுதிகளில் வசிக்கும், 18 வயது பூர்த்தியடைந்த, 5ம் வகுப்பு படித்துள்ள இளைஞர்கள், 99449 80444, 97895 10248 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். 6 நாட்களும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us