/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.9.70 லட்சம் மோசடி 2 பேருக்கு 'காப்பு' ரூ.9.70 லட்சம் மோசடி 2 பேருக்கு 'காப்பு'
ரூ.9.70 லட்சம் மோசடி 2 பேருக்கு 'காப்பு'
ரூ.9.70 லட்சம் மோசடி 2 பேருக்கு 'காப்பு'
ரூ.9.70 லட்சம் மோசடி 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 29, 2024 01:12 AM
சேலம்: சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த மலர்கொடி, கடந்த, 22ல், மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதில், 'மக-னுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, என் உறவினரான லட்சுமணன், 46, அவரது நண்பர் தனசேகர், 36, கூறினர். அதை நம்பி, இரு தவணைகளில், 9.70 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் பல மாதங்களாகியும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டதற்கு மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்' என கூறியி-ருந்தார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க, கமிஷனர் பிரவீன்குமார் அபி-னபு, அம்மாபேட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் உத்தர-விட்டார். இதையடுத்து போலீசார் விசாரித்து, ஆத்துார், நடுவ-லுாரை சேர்ந்த லட்சுமணன், கிச்சிப்பாளையம், பச்சப்பட்டியை சேர்ந்த தனசேகர் ஆகியோரை கைது செய்தனர்.