Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சோமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடு

சோமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடு

சோமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடு

சோமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடு

ADDED : ஜூன் 25, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
இடைப்பாடி : சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை மலை அடிவாரத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில், 1994 ஜூலையில் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின், 2006ல் கும்பாபிஷேகம் நடக்கவில்லை.

ராஜகோபுரம் கட்டப்பட்ட பின் கும்பாபிஷேகம் நடக்கும் என, அறநிலையத்துறை அறிவித்து, 2008ல் பணியை துவங்கியது. 16 ஆண்டுகளாகியும் பணி முடியாததால், சங்ககிரி பிரமுகர்கள் கூடி, அவர்களது பங்களிப்புடன் ராஜகோபுரம் கட்டி தருவதாக, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதன்படி ராஜகோபுர பணி முடிக்கப்பட்டு, ஜூலை, 12ல் கும்பாபி ேஷகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடு பணியாக, கோபுரங்கள், மண்டபம் மீதுள்ள சுவாமிகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவில் உட்புறம் வர்ணம் பூசுதல், கொடிமரம் வைக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும் யாகசாலை அமைக்கப்பட்டு வேள்வி நடத்த கட்டுமானப் பணி துவங்கி நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us