/உள்ளூர் செய்திகள்/சேலம்/தடகளத்தில் அசத்திய மாணவருக்கு பாராட்டுதடகளத்தில் அசத்திய மாணவருக்கு பாராட்டு
தடகளத்தில் அசத்திய மாணவருக்கு பாராட்டு
தடகளத்தில் அசத்திய மாணவருக்கு பாராட்டு
தடகளத்தில் அசத்திய மாணவருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 20, 2024 08:36 AM
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன், 46. தனியார் பஸ் டிரைவர். இவரது மூத்த மகன் ரவீந்தரா, 17. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான இவர், பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.
பெங்களூருவில், 13வது தேசிய அளவில், இளையோர் மாற்றுதிறனாளிகளுக்கு தடகள போட்டி, கடந்த, 15ல் தொடங்கி, 3 நாள் நடந்தது. இதில், 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் ரவீந்திரா, நீளம் தாண்டுதலில் வெள்ளி, 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். அவருக்கு நேற்று காலை பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
அதில் தலைமை ஆசிரியர் குமார், விளையாட்டு பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர், மாணவருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.