/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அரளி உற்பத்தி அதிகரிப்பு விலை சரிவால் நஷ்டம் அரளி உற்பத்தி அதிகரிப்பு விலை சரிவால் நஷ்டம்
அரளி உற்பத்தி அதிகரிப்பு விலை சரிவால் நஷ்டம்
அரளி உற்பத்தி அதிகரிப்பு விலை சரிவால் நஷ்டம்
அரளி உற்பத்தி அதிகரிப்பு விலை சரிவால் நஷ்டம்
ADDED : ஜூன் 10, 2024 01:58 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஏக்கரில், 5 வகை அரளி நடவு செய்யப்படுகின்றன. தினமும் அறுவடை செய்யப்படும் அரளி, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
சமீபத்தில் பெய்த மழையால் அரளி உற்பத்தி அதிகரித்து விலை சரிந்துள்ளது. சேலத்தில், 1 கிலோ சாதா அரளி கடந்த, 4, 5ல், 60 ரூபாய்க்கு விற்றது. 6ல், 50 ரூபாய்; 7ல், 20 ரூபாயாக சரிந்தது. கடந்த இரு நாட்களாக, 30 ரூபாய்க்கு விற்பனையானது.
இதுகுறித்து அரளி விவசாயிகள் கூறுகையில், 'மழையால் காய்ந்த செடிகள் துளிர் விட்டு வளர்ந்து மகசூல் தந்துள்ளது. 1 கிலோ அரளி பறிக்க கூலி, 50 ரூபாய் ஆகிறது. அதை விட குறைவாக விலை கிடைப்பதால் கிலோவுக்கு, 20 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பூ பறிக்காமல் செடியிலேயே விடுகிறோம்' என்றனர்.