Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மகனை கொலை செய்ய முயன்ற தந்தை கைது

மகனை கொலை செய்ய முயன்ற தந்தை கைது

மகனை கொலை செய்ய முயன்ற தந்தை கைது

மகனை கொலை செய்ய முயன்ற தந்தை கைது

ADDED : ஜூன் 19, 2024 02:40 AM


Google News
இடைப்பாடி, இடைப்பாடி, வெள்ளார்நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் மணி மகன் அபிகுமார், 25. இவர் லாரி கிளீனராக பணிபுரிகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான, 3 சென்ட் நிலத்தை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்திய பிறகு, ஓராண்டுக்கு முன்பு தனது பெரியப்பா தங்கராஜ் பெயருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதனால் அபிகுமாருக்கும், அவரது தந்தை மணிக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்ட போது, மணி அரிவாளால், மகன் அபிகுமாரை வெட்டியுள்ளார். அதில் வலது கையின் சுண்டுவிரல் துண்டானது. மேலும் கை, உடல் பகுதிகளில் வெட்டுகாயம் ஏற்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த அபிகுமார், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இடைப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, மகனை கொலை செய்ய முயன்ற தந்தையை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us