Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூலை 29, 2024 01:07 AM


Google News
சேலம்: சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:

நடப்பு 2024 - 25ல், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உயிர்ம வேளாண்மையை சிறப்பாக செய்வதோடு அதை பிற விவசாயிகளுக்கு ஊக்கப்படுத்தும் விவசாயிகளுக்கு, சிறந்த உயிர்ம வேளாண் விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது, மாநில அளவில், 3 பேருக்கு வழங்கப்படுகிறது. அதில், முதல் மூன்று இடங்கள் முறையே, 2.50 லட்சம் ரூபாய், 1.50 லட்சம், 1 லட்சம் ரூபாயுடன் பதக்கத்தை, தமிழக அரசு வழங்குகிறது.

விருது பெற விரும்பும் விவசாயிகளின் தகுதியாக, குறைந்த-பட்சம் ஒரு ஏக்கரில் உயிர்ம வேளாண்மையில் வேளாண், தோட்-டக்கலை பயிர்களை சாகுபடி செய்திருப்பதோடு முழுநேர உயிர்ம விவசாயியாக இருக்க வேண்டும். எந்த ரசாயன பொருட்க-ளையும் விவசாயத்தில் பயன்படுத்தி இருக்கக்கூடாது. குறைந்-தது, 3 ஆண்டு உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருப்பதோடு உயிர்ம வேளாண் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள், அக்-ரிஸ்நெட்(https://www.tnagrisnet.gov.in) வலைதளத்தில் செப்., 15க்குள் பதிவு செய்வதோடு பதிவு கட்டணம், 100 ரூபாயை, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு வேளாண் உதவி இயக்குனர் அல்லது இணை இயக்குனரை சந்திக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us