Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/போலி விமான டிக்கெட் விவகாரம்: ஆந்திராவை சேர்ந்தவர் கைது

போலி விமான டிக்கெட் விவகாரம்: ஆந்திராவை சேர்ந்தவர் கைது

போலி விமான டிக்கெட் விவகாரம்: ஆந்திராவை சேர்ந்தவர் கைது

போலி விமான டிக்கெட் விவகாரம்: ஆந்திராவை சேர்ந்தவர் கைது

ADDED : ஜூலை 20, 2024 09:36 AM


Google News
சேலம்: போலி விமான டிக்கெட் விவகாரத்தில், 105 பேரிடம், 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, ஆந்திராவை சேர்ந்தவரை, போலீசார் கைது செய்தனர்.

ஆன்மிக சுற்றுலாவாக, அயோத்தி, காசி உள்பட பல்வேறு இடங்களுக்கு விமானம் மூலம் அழைத்துச்செல்வதாக, ஆந்திரா மாநிலம் திருப்பதியை சேர்ந்த சபாநாதன், 45, அறிவித்தார். இப்பணியில் தரகர்கள் ஈடுபட்டனர். விமானம் மூலம் அயோத்தி சென்று திரும்ப ஒருவருக்கு, 12,000 ரூபாய் என, 'பேக்கேஜ்' முறையில் அறிவித்தனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து, 105 பேர் பணம் செலுத்தினர். அவர்களுக்கு விமான டிக்கெட் அனுப்பப்பட்டது. அனைவரும் மதுரை விமான நிலையம் சென்றபோது, அது போலி டிக்கெட் என தெரிந்தது. அவர்கள், அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சேலத்தை சேர்ந்த, 10 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.

அவர்கள் புகார்படி, தனிப்படை போலீசார் விசாரித்ததில், 105 பேரிடம், ௧௩ லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. அதில் சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த ராஜா, 60, என்பவர் தரகராக செயல்பட்டு, சேலத்தை சேர்ந்தவர்களை, அந்த பேக்கேஜில் சேர்த்துவிட்டது தெரிந்தது. இதில் சபானந்தத்தை நேற்று கைது செய்த போலீசார், ராஜாவிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us