/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயிலில் இருந்து விழுந்த இன்ஜி., மாணவர் பலி ரயிலில் இருந்து விழுந்த இன்ஜி., மாணவர் பலி
ரயிலில் இருந்து விழுந்த இன்ஜி., மாணவர் பலி
ரயிலில் இருந்து விழுந்த இன்ஜி., மாணவர் பலி
ரயிலில் இருந்து விழுந்த இன்ஜி., மாணவர் பலி
ADDED : ஜூன் 29, 2024 08:51 PM
சேலம்,:திருப்பத்துார் மாவட்டம், கிழக்கு பத்தனவாடி, கந்திலியை சேர்ந்த சக்திமகி, 22, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், மூன்றாமாண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு, கோவை - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவற்ற பெட்டியில் நேற்று முன்தினம் பயணித்தார்.
டேனிஷ்பேட்டை - லோகூர் இடையே ரயில் சென்றபோது, கழிப்பறைக்கு சென்ற சக்திமகி தவறி விழுந்தார். படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சேலம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.