Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கரபுரநாதர் பெரியநாயகி அம்மனுக்கு தினமும் 'குங்குமம்' லட்சார்ச்சனை

கரபுரநாதர் பெரியநாயகி அம்மனுக்கு தினமும் 'குங்குமம்' லட்சார்ச்சனை

கரபுரநாதர் பெரியநாயகி அம்மனுக்கு தினமும் 'குங்குமம்' லட்சார்ச்சனை

கரபுரநாதர் பெரியநாயகி அம்மனுக்கு தினமும் 'குங்குமம்' லட்சார்ச்சனை

ADDED : ஜூலை 19, 2024 02:30 AM


Google News
வீரபாண்டி: அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தையொட்டி, பெரிய நாயகி அம்-மனுக்கு தினமும் திருவிளக்கு பூஜை 'குங்குமம்' லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது.

சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் பெரியநாயகி அம்-மனுக்கு, ஆடி மாதத்தையொட்டி திருவிளக்கு பூஜையுடன் பெண்கள், 'குங்குமம்' லட்சார்ச்சனை செய்து வழிபட்டு வருகின்-றனர். ஆடி மாதம் முழுவதும் தினமும் காலையில் நடக்கும், திரு

விளக்கு பூஜையில் பெண்கள் திருமண தடை விலகவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், 'குங்குமம்' லட்சார்ச்சனை செய்து வருகின்றனர்.

இந்த பூஜையில் கலந்து கொண்டு, அம்மனிடம் வேண்டிக் கொண்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதால், திர-ளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கோவில் கும்பாபி ேஷக திருப்பணி நடந்து வருவதால், மூலவர் கரபுரநாதர் மற்றும் பெரிய நாயகி அம்மன் சன்னதிகள் மட்டும், பாலாலயம் செய்யப்படாமல் வழக்கமான தினசரி பூஜைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us