Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'நான் ஹிந்து அல்ல' வாசகத்தால் சர்ச்சை

'நான் ஹிந்து அல்ல' வாசகத்தால் சர்ச்சை

'நான் ஹிந்து அல்ல' வாசகத்தால் சர்ச்சை

'நான் ஹிந்து அல்ல' வாசகத்தால் சர்ச்சை

ADDED : ஜூலை 05, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார், மந்தைவெளி வழியே, ஆத்துார் - கடம்பூர் நெடுஞ்சாலை செல்கிறது. அதில், மந்தைவெளி பஸ் ஸ்டாப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டிருந்த நிழற்கூடம் சேதமடைந்து இருந்தது.

அப்பகுதி இளைஞர்கள் சிலர், நிழற்கூடத்தை சுத்தம் செய்து, வண்ணம் தீட்டினர். அம்பேத்கர், புத்தர் உருவ படங்களை வரைந்தனர். ஒரு பகுதியில், மாணவர் புத்தகம் படிப்பது போன்ற ஓவியம் வரைத்து, அவரது கையில் உள்ள புத்தகத்தின் முன்புறம், 'நான் இந்து அல்ல' என எழுதப்பட்டுள்ளது. ஆனால், அரசு சார்பில் கட்டப்பட்ட நிழற்கூடத்தில் எழுதப்பட்ட வாசகத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமாரிடம் கேட்டபோது, ''அரசு சார்ந்த கட்டடம், சுவர்களில் மதம் சார்ந்த கருத்துகளை எழுதக்கூடாது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us