Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கிணற்றில் விழுந்த காட்டெருமை 10 மணி நேரத்துக்கு பின் மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டெருமை 10 மணி நேரத்துக்கு பின் மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டெருமை 10 மணி நேரத்துக்கு பின் மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டெருமை 10 மணி நேரத்துக்கு பின் மீட்பு

ADDED : ஜூலை 07, 2024 01:20 AM


Google News
ஏற்காடு : ஏற்காடு, பெலாத்துாரில் உள்ள விவசாய நிலத்தில், 30 அடி ஆழ கிணறு உள்ளது. அதில், அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை நேற்று காலை, 7:10 மணிக்கு தவறி விழுந்-தது. உடனே அருகில் இருந்தவர்கள் வனம், தீயணைப்பு துறையி-னருக்கு தகவல் கொடுத்தனர்.

ஏற்காடு வனச்சரக வன அலுவலர் முருகன் உள்ளிட்ட வனத்து-றையினர், தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து, காட்டெரு-மையை மீட்க முயன்றனர். அங்கு வந்த மாவட்ட வன அலுவலர் கஷ்யப் சஷாங்க் ரவி, எருமையை மீட்க ஆலோசனை வழங்-கினார். தண்ணீர் அதிகம் இருந்ததோடு, கிணறு சிறிதாக இருந்-ததால், எருமையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். இதனிடையே, ஓசூரில் இருந்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் வரவ-ழைக்கப்பட்டார். அவர், எருமைக்கு மயக்க ஊசி செலுத்தினார். தொடர்ந்து வனம், தீயணைப்பு துறையினர், மக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி எருமை உடலில் கயிற்றை கட்டினர். பின் மாலை, 5:15 மணிக்கு கிரேன் இயந்திரம் மூலம், எருமையை துாக்கி உயிருடன் மீட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us