/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உயிரியல் பூங்காவுக்கு 2ம் நாளாக விடுமுறை உயிரியல் பூங்காவுக்கு 2ம் நாளாக விடுமுறை
உயிரியல் பூங்காவுக்கு 2ம் நாளாக விடுமுறை
உயிரியல் பூங்காவுக்கு 2ம் நாளாக விடுமுறை
உயிரியல் பூங்காவுக்கு 2ம் நாளாக விடுமுறை
ADDED : ஜூன் 02, 2024 07:30 AM
சேலம் : சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கடந்த மே, 30ல், கடமான் முட்டியதில் ஒப்பந்த ஊழியர் தமிழ்செல்வன் உயிரிழந்தார். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். தொடர்ந்து மான்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, நேற்று முன்தினம் பூங்காவுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
நேற்றும் பூங்காவுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மான்களை, வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இன்று பூங்கா செயல்படும் என, அதன் வனச்சரக அலுவலர் கமலநாதன் தெரிவித்தார்.