Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பச்சியம்மன் கோவில் நகை உண்டியல் காணிக்கை திருட்டு

பச்சியம்மன் கோவில் நகை உண்டியல் காணிக்கை திருட்டு

பச்சியம்மன் கோவில் நகை உண்டியல் காணிக்கை திருட்டு

பச்சியம்மன் கோவில் நகை உண்டியல் காணிக்கை திருட்டு

ADDED : ஜூலை 08, 2024 04:58 AM


Google News
வாழப்பாடி : சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், ராமநாதபுரத்தில் உள்ள பச்சியம்மன் கோவிலில், பூசாரி மயில்வாகனன், தினமும் காலை, மாலையில் பூஜை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை, 7:00 மணிக்கு கோவிலை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, சுவா-மிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடுபோனது தெரிந்தது. உண்டியலும் உடைக்கப்பட்டு காணிக்கை திருடப்பட்-டிருந்தது. உண்டியலில், 50,000 ரூபாய், 1.7 பவுன் நகை திருடு-போனதாக, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது-குறித்து வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us