ADDED : மார் 15, 2025 02:44 AM
தொழிலாளி மாயம்
மேட்டூர்:மேட்டூர், கோல் நாயக்கன்பட்டி, பாலமரத்துக்கொட்டாயை சேர்ந்த, கூலித்தொழிலாளி பழனியப்பனின் இரண்டாவது மகன் விஜயன், 32. வெளியூரில் தங்கி கட்டட வேலை செய்கிறார். கடந்த, 12 இரவு, வீட்டில் இருந்து விஜயன் வெளியே சென்றார். அவர், வேலைக்கு சென்றதாக குடும்பத்தினர் நினைத்தனர். பின் வேலைக்கு செல்லாதது தெரியவந்தது. இதனால் விஜயனை கண்டுபிடித்து தரக்கோரி, பழனியப்பன் நேற்று அளித்த புகார்படி மேட்டூர் போலீசார் தேடுகின்றனர்.