Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஊத்தங்கரை அருகே ஓடும் பஸ்சில் தீ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

ஊத்தங்கரை அருகே ஓடும் பஸ்சில் தீ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

ஊத்தங்கரை அருகே ஓடும் பஸ்சில் தீ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

ஊத்தங்கரை அருகே ஓடும் பஸ்சில் தீ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

ADDED : ஜூலை 20, 2024 07:42 AM


Google News
ஊத்தங்கரை : திருப்பூரில் இருந்து, திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ், ஊத்தங்கரை அருகே வரும்போது இன்ஜினில் திடீரென தீப்-பிடித்ததால், பயணிகள் அச்சமடைந்தனர்.

திருப்பூரில் இருந்து, திருவண்ணாமலைக்கு அன்னதான பொருட்கள் மற்றும் 35 பயணிகளுடன், திருப்பூர் பணிமனையை சேர்ந்த அரசு பஸ் நேற்று மாலை சென்றது.

திருப்பூரை சேர்ந்த கார்த்திக், 35, என்பவர் ஓட்டி சென்றார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி காப்-புக்காடு அருகே பஸ் வரும்போது, இன்ஜினில் தீப்பிடித்தது.

உடனடியாக டிரைவர் பயணிகளை பாதுகாப்பாக இறக்கினார். ஊத்தங்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பஸ் ஊத்தங்கரை அரசு பஸ் டிப்போவிற்கு எடுத்து செல்லப்பட்டது.

பஸ்சில் சென்ற பயணிகள் காயம், உயிர்சேதம் இன்றி அதிர்ஷ்-டவசமாக உயிர் தப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us