/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மண்பாண்ட இயந்திரங்கள் அரசு வழங்க வலியுறுத்தல் மண்பாண்ட இயந்திரங்கள் அரசு வழங்க வலியுறுத்தல்
மண்பாண்ட இயந்திரங்கள் அரசு வழங்க வலியுறுத்தல்
மண்பாண்ட இயந்திரங்கள் அரசு வழங்க வலியுறுத்தல்
மண்பாண்ட இயந்திரங்கள் அரசு வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 24, 2024 07:48 AM
சேலம் : தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்(குலாலர்) சங்க பொன்-விழா, சேலம் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்(குலாலர்) சங்க, 2ம் ஆண்டு தொடக்க விழா, தொங்கும் பூங்கா அருகே ரோட்டரி ஹாலில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சேம.நாரா-யணன் தலைமை வகித்து பேசினார். தமிழ்நாடு குலாலர் மகா-ஜன சங்கத்தலைவர் ராஜசேகரன், சேலம் மாவட்ட தலைவர் ராஜா, செயலர் கதிர்வேலு, பொருளாளர் கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து சேம.நாராயணன் கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து பிரிவினருக்கும் சரி-யாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்-களை பயன்படுத்தி மண்பாண்டங்கள் செய்ய இயந்திரங்களை அரசு வழங்க வேண்டும். தொழிலை பாதுகாக்க, தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிப்பது அவ-சியம். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத்-தொகை, 5,000ல் இருந்து, 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.