Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அரவக்குறிச்சி அருகே அதிகாலை கோர விபத்து தந்தை, மகள், மாமியார் உடல் நசுங்கி பலி

அரவக்குறிச்சி அருகே அதிகாலை கோர விபத்து தந்தை, மகள், மாமியார் உடல் நசுங்கி பலி

அரவக்குறிச்சி அருகே அதிகாலை கோர விபத்து தந்தை, மகள், மாமியார் உடல் நசுங்கி பலி

அரவக்குறிச்சி அருகே அதிகாலை கோர விபத்து தந்தை, மகள், மாமியார் உடல் நசுங்கி பலி

ADDED : ஜூலை 23, 2024 01:12 AM


Google News
அரவக்குறிச்சி : கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது, அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில், தந்தை, மகள், மாமியார் உடல் நசுங்கி பலி-யாகினர். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சூளை ஆர்.கே.நகரை சேர்ந்தவர் கிருஷ்ண-குமார், 40; மனைவி மோகனா, 40; மகன் சுதர்சன், 15; மகள் வருணா,10; மற்றும் மாமியர் இந்திராணி, 67, ஆகியோர், கடந்த, 20ம் தேதி மாலை, திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு வேகன் ஆர் காரில் சென்றனர். அங்கு சுவாமி தரிசனத்தை முடித்-துவிட்டு, மீண்டும் ஈரோடு நோக்கி புறப்பட்டனர். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மதுரை - கரூர் தேசிய நெடுஞ்சாலை, ஆண்டிப்பட்டி கோட்டை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த வேலா மரத்தின் மீது மோதி விபத்-துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில், காரை ஓட்டிச் சென்ற கிருஷ்ணகுமார், மகள் வருணா, மாமியார் இந்திராணி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரி-தாபமாக உயிரிழந்தனர். மனைவி மோகனா, மகன் சுதர்சன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவ-ரையும், அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அரவக்கு-றிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்-பத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களி-டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us