Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

ADDED : ஜூலை 28, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
அரக்கோணம்:ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராகவன், 52. இவர் திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். லாவண்யா என்ற மனைவியும், பிரவின் மற்றும் நவின் என இரு மகன்கள் உள்ளனர்.

இரவு 10:30 மணியளவில் அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் உள்ள கடைக்கு செல்ல அரக்கோணம் ரயில் நிலைய தண்டவாளத்தை மொபைல் போனில் பேசியபடி ராகவன் கடந்தார்.

இரண்டாவது நடைமேடை தண்டவாளத்தை கடந்த போது, அவ்வழியாக சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரக்கோணம் ரயில்வே போலீசார், உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us